Site icon TNPSC Academy

TNPSC Tamil Current Affairs November 22, 2017

TNPSC Tamil Current Affairs November

www.tnpsc.academy TNPSC Tamil Current Affairs November 22, 2017 (22/11/2017)

 

Download as PDF

தலைப்பு : இந்திய கலாச்சார திருவிழாக்கள், மாநிலங்களின் விவரங்கள் மற்றும் அமைப்புகள்

மணிப்பூர் சங்காய் விழா 2017

நவம்பர் 21 முதல் 30 நவம்பர் வரை ஒவ்வொரு ஆண்டும் மணிப்பூர் மாநிலம் “மணிப்பூர் சங்காய் விழா” என்ற திருவிழாவினை கொண்டாடுகிறது

சங்காய் விழா பற்றி:

சங்காய் திருவிழா, இந்திய மாநிலமான மணிப்பூரில் ஆண்டு தோறும் நவம்பரின் கடைசி பத்து நாட்களில் கொண்டாடப்படுகிறது.

இதற்காக மணிப்பூர் மாநில சுற்றுலாத் துறை திருவிழாவை ஏற்று நடத்துகிறது.

மணிப்பூரில் காணப்படும் மணிப்பூர் மாநில விலங்கான சங்காய் மானின் நினைவாக சங்காய் திருவிழா என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த திருவிழாவின் போது உள்ளூரில் தயாரான கைவினைப் பொருட்களும், கலை வேலைப்பாடுகள் நிறைந்த ஓவியங்களும், உணவுகளும் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன.

இந்த விழாவின் ஒவ்வொரு பதிவும் கலை மற்றும் கலாச்சாரம், கைத்தறி, கைவினை, உள்நாட்டு விளையாட்டு, சமையல், இசை மற்றும் மாநிலத்தின் சாகச விளையாட்டு போன்ற துறைகளில் மாநிலத்தின் சுற்றுலாத் திறனைக் காட்டுகின்றன.

பின்னணி:

இது 2010 ஆம் ஆண்டில் தொடங்கி மணிப்பூரில் உலகம் முழுவதும் அதன் செல்வந்த பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் வெளிப்படுத்த மிகப்பெரிய இடமாக வளர்ந்து வருகிறது.

_

தலைப்பு : புதிய நியமனங்கள், செய்திகள் உள்ள நபர்கள்

ஜிம்பாப்வேயின் அதிபர் ராபர்ட் முகாபே ராஜினாமா செய்தார்

1980 ல் சுதந்திரம் பெற்ற பின்னர் ஜிம்பாப்வே ஆட்சி செய்து வந்த ராபர்ட் முகாபே அவர்கள், ஜனாதிபதி பதவியிலிருந்து விலகினார்.

இதன் மூலம் தனது 37 ஆண்டு ஆட்சி காலத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.

அவரது ராஜினாமா வரை, அவர்தான் உலகின் பழமையான தலைவராக பதவி வகித்துள்ளார்.

_

தலைப்பு : தேசிய, பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதம், சமீபத்திய நாட்குறிப்புகள்

இந்தியா பிரம்மோஸ் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது

இந்திய வானூர்தியின் முன்னணி சுஹோய் -30 MKI போர் ஜெட்டிலிருந்து முதல் முறையாக பிரம்மோஸ் சூப்பர்சோனிக் cruise ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

முக்கிய அம்சங்கள்:

பிரம்மோபுத்ரா மற்றும் மோஸ்க்வவா என்ற இரு ஆறுகளில் இருந்து பிரம்மோஸ் என்ற பெயர் எடுக்கப்பட்டது.

இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) மற்றும் ரஷ்யாவின் NPOM ஆகிய அமைப்புகளின் ஒரு கூட்டு முயற்சி பிரம்மோஸ் ஆகும்.

_

தலைப்பு : விண்வெளி சார்ந்த துறை, சமீபத்திய நாட்குறிப்புகள்

2019 ஆம் ஆண்டிற்கான திட்டமிடப்பட்ட சூரியனை ஆய்வு செய்ய இந்தியாவின் முதல் பணி: இஸ்ரோ

இஸ்ரோ (இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் குழு) செயற்கைக்கோள் மைய இயக்குனர் மயில்ஸ்வாமி (Mylswamy Annadurai)சமீபத்தில் இஸ்ரோவின் திட்டங்களை வெளியிட்டுள்ளார்.

‘ஆதித்யா-எல் 1’ என்ற சூரியனை ஆய்வு செய்ய முதல் இந்தியப் பணியான செயற்கைக்கோளை 2019 – 2020 ஆம் ஆண்டளவில் விண்ணில் எய்த திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

ஆதித்யாஎல் 1 பற்றி:

சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்துபி.எஸ்.எல்.வி-எக்ஸ்.எல் ராக்கெட் மூலம் ஆதித்யா-எல் 1 செயற்கை கோள் விண்ணில் செலுத்தப்படும்.

400 கிலோ எடையுள்ள இந்த செயற்கை கோள் பூமியில் இருந்து 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் ஒளிவட்ட பாதையில் (எல்-1) சுற்றி வரும்.

அவ்வளவு தொலைவில் சுற்றி வருவதால் அது எப்போதும் சூரியனை பார்த்தபடி இருக்கும்.

கிரகணங்கள் சமயத்தில் கூட அது சூரியனின் பார்வையில் இருந்து மறையாது.

ஆதித்யா-எல் 1 செயற்கை கோளில் உள்ள கருவிகள் அனுப்பும் தகவல்கள் மூலம் சூரியனை பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்படும்.

Exit mobile version